நடமாடும் சேவை
நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 2022/01/29, 30 ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இடம்பெற உள்ளது. பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு-2019
மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(26.06.2019) காலை 10 மணிக்கு எமது அலுவலக முன்றலில் இருந்து போதை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பலூன்கள் வானில் பறக்க விடும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.







| பிரதேசமட்ட விளையாட்டு விழா-2019 ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் கீழ்பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா புனித அந்தோணியார் பாடசாலை மைதானத்தில் 11-04-2019 அன்று பி.ப 2.00 மணிக்கு திருமதி மஞ்சுளாதேவி சதீஷன்(பிரதேசசெயலாளர்) அவர்களின் தலமையில் விளையாட்டு நிகழ்வுகள் வெகுவிமர்சையாக இடம்பெற்றன. |
|
![]() |
![]() |
















